x

Aadhavan Dheetchanya

எஸ்.எம்.இரவிச்சந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்ஷண்யா, (பிறப்பு: 6 மார்ச் 1964) அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தவர். கையெழுத்து பிரதிகளில் எழுதத் துவங்கிய காலம் துவங்கி இன்றுவரை அவருடைய எழுத்துகள் எல்லாமே அதிகார படிநிலையை தகர்த்தெரியும் சம்மட்டிகளாகவே உள்ளன. “சில இடங்களில் சமத்துவம் என்னும் சொல்லே ஒரு மோசடியான சொல்லாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு” என்று குறிப்பிடும் தோழர் ஆதவன், எழுத்துப் பணியுடன் நின்று விடாமல் தொழிற்சங்க பணியிலும் நீண்டகாலம் களப்பணி ஆற்றியவர். அரூரை சொந்த ஊராக கொண்ட இவர், டெலிபோன் துறையில் தருமபுரி மாவட்ட தொழிற்சங்க தலைவராக பணியாற்றினார். புதிய நாடுகளையும், விநோதமான கதாபாத்திரங்களையும் படைப்பதில் புனைவுலகத்தில் தனித்து நிற்கிறார். உதாரணத்திற்கு ”மீசை என்பது வெறும் மயிர்” ”லிபரல் தேசத்து கதைகள்” என்று சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ்ச் சிற்றிதழ் உலகில் காத்திரமான படைப்புகளை ஆதவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “புது விசை” இதழ் செய்து வந்தது. சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல வடிவங்களிலும் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Related Products