Pudhumaipithan
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ.விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும், நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் விவாதிக்கப்படுகின்றன. .