Jayakanthan
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர். இந்திய ஒன்றிய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவரது படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்திருக்கின்றது. ஜெயகாந்தனின் இலக்கிய வாழ்க்கை 1950-களில் தொடங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் கிடைத்தன. ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் செயல்பட்டார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகிய திரைப்படங்களை இவரே இயக்கினார். இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றது.