x

Adhavan

ஆதவன் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம் ஆகும். 1942-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் நாள் இவர் பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தில்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்ட்' நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987, ஜூலை 19-ஆம் தேதி சிருங்கேரி, துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். இவரது படைப்புகள், பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ரஷ்யம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது மரணத்திற்கு பின், 1987ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்பட்டது.

Related Products