x

Akilan

அகிலன் என்று அறியப்படும் பி.வி. அகிலாண்டம் ((ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், அவர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் சிறிய பத்திரிகைகளில் வெளிவந்தன. அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற வரலாற்று நாவல் 1975-ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது[. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975-ஆம் ஆண்டில் இவருக்கு ராஜா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இவருடைய படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மனி, மாண்டரின், மலாய் மற்றும் செக் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய ‘வேங்கையின் மைந்தன்’ என்ற வரலாற்று நாவலுக்கு, தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1963-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

Related Products