Albert Einstein
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர்களில் ஒருவராக கருதப்படுவதோடு, இதுவரை வாழ்ந்த இயற்பியலாளர்களில் தலைசிறந்த இயற்பியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியல், எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். குவாண்டம் எந்திரவியல்,சார்பியல் கோட்பாடு இரண்டும் நவீன விஞ்ஞானத்தின் (குறிப்பாக வானியற்பியலின்) இரு தூண்களாக கருதப்படுகிறது.ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப்பயன்பாட்டில் ஐன்ஸ்டீன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999-ல், புதிய ஆயிரமாவது (2000-மாவது ஆண்டு) ஆண்டு குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்),"இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.