Andal Priyadharshini
ஆண்டாள் பிரியதர்சினி (பிறப்பு: 5.10.1962) ஒரு தமிழ்க் கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் பிறந்தவர் சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பும், முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளம் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். கவிதை, சிறுகதை, நாவல் , கட்டுரை, திறனாய்வு என இதுவரை இருபது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்..
நாவல்கள்: தகனம், கனவுகள் கைப்பிடிக்குள், முதல் ஒளிபரப்பு ஆரம்பம், தாளம் தப்பிய தாலாட்டு
குறுநாவல்கள்: சிகரம் சிலந்திக்கும் எட்டும், கதாநாயகி, சாருலதா, வேடிக்கை மனிதர்கள்
சிறுகதைத் தொகுப்புகள்: , சுருதி பிசகாத வீணை, தோஷம்,, தலைமுறை தாகம், பெருமூச்சின் நீளம், ஆண்டாள் பிரியதர்ஷிணி சிறுகதைகள்'
கவிதைத் தொகுப்புகள்: புதிய திருப்பாவை, சுயம் பேசும் கிளி, முத்தங்கள் தீர்ந்துவிட்டன, சூரியனை விடிய வைப்போம், தோகையெல்லாம் துப்பாக்கிகள்
கட்டுரைகள்: பெண் எழுத்து, விடிவைத்தேடி, தேசம் மிச்சமிருக்கும்
பாடநூல்களில் படைப்புகள்: 1. வானவில் வாழ்க்கை, ஸ்டெல்லாமேரி கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது, 2. கதாநாயகி, கேரளா பல்கலைக்கழகத்தில் பள்ளி இறுதிவகுப்பிற்குப் பாடத்திட்டமாக உள்ளது, 3. தகனம், திருச்சி ஜெயின்ட்ஜோசப் கல்லூரியில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கவிதைகளுக்காக 2000-ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து விருது, தோஷம் சிறுகதைக்காக லில்லி தேவசிகாமணி விருது, உண்டியல் கதைக்காக பாவலர் முத்துசாமி விருது, கழிவு சிறுகதைக்காக இலக்கியச்சிந்தனை விருது, சுயம்பேசும் கிளி கவிதைத் தொகுப்பிற்காக நாகப்பன் ராஜம்மாள் விருது,
தகனம் நாவலுக்கு காசியூர் ரங்கம்மாள் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
சாண அடுப்பும் சூரிய அடுப்பும் இந்திய அரசின் பரிசு பெற்றது