Arivumathi
அறிவுமதி, தமிழ்க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார்.இவர் விருத்தாசலம் நகருக்கு அருகில் உள்ள சு.கீணணூரில் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சென்னையில் எபிகிராபி மற்றும் தொல்பொருளியல் பயின்றார். ஒரு பாடலாசிரியராக மாறுவதற்கு முன்பு பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாக்யராஜ் போன்ற பல புகழ்பெற்ற இயக்குநர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கவிதைகள் சிறுகதைகள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.