x

Arunan

பேராசிரியர் அருணன் அவர்கள் முற்போக்கு எழுத்தாளர், மார்க்சிய சிந்தனையாளர், கல்வியாளர், இலக்கியவாதி, சமூக ஆய்வாளர், தத்துவவாதி என பலமுகம் கொண்ட ஆளுமை. மார்க்சிஸ்டு தவைவராக இருந்த ஏ.கே.கோபாலன் அவர்களின் "நான் என்றும் மக்கள் ஊழியனே" நூலை படித்த அருணன், அவரை பற்றிய கட்டுரையை தீக்கதிரில் எழுதி எழுத்துலகத்துற்குள் நுழைந்தார். இதுவே அவரது அரசியல் எழுத்தின் துவக்கம், அவரது ஆசான் கே.முத்தையா அவர்களின் தூண்டுதலின் பேரில் நாவல்களை பற்றிய மதிப்பீட்டை தொடங்கினார். செம்மலரில் இலக்கிய எழுத்து தொடங்கியது. இவரது முதல் நூல் "இந்திய கம்யூனிச இயக்க வரலாறு 1917-1934" என்பதாகும். தொடந்து பல வரலாற்று, அரசியல், சமூக, தத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட அருணன் ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு நூலும் பல நூறு நூல்களின் பிழிவாகவும், தத்துவத் தெளிவைத்தருவனவாகவும் எழுதப்பட்டிருக்கிறது, ”தமிழகத்தின் இருநூற்றாண்டு சீர்திருத்த வரலாறு” என்ற நூல் அருணன் அவர்களை சமூக ஆய்வாளர்களிடம் ஆழமான தாக்கத்தை உருவாக்கியதன் துவக்கம் என்று சொல்லலாம். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகள், ஊடகம் மற்றும் இணைய வெளியில் பொதுஉரைகள் என பேராசிரியர் அருணன் அவர்கள் என்றும் சமூகத்திற்கான பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார். ஆய்வாளராக மட்டுமில்லாமல், வரலாற்று, சமூக நாவல்களையும், பயணக்கட்டுரைகளையும் நூல்களாக தமிழிலக்கிய உலகிற்குக் கொடுத்திருக்கிறார். நிழல்தரா மரம், பூரு வம்சம், கடம்பவனம் ஆகிய அவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.

Related Products