x

A.Sivasubramanian

ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளராவார். பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் என பன் முகங்களுடன் சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல் துறைகளில் இவர் இயங்கி வருகிறார். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியரான இவர் தமிழ்ச்சமுகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும், ஆவணப்படுத்தியும் வருகிறார். சமூக அறிவியல் கூட்டிணைவு அமைப்பின் ஒரு பங்களிப்பாளரும் ஆவார். அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23-வது “புதுமைப்பித்தன் நினைவு” விருது 2018 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் எழுதிய "ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்" என்ற நூலுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கப்பட்டது

Related Products