Athanur Chozhan
ஆதனூர் சோழன், இயற்பெயர் சோழராஜன் (பிறப்பு:ஏப்ரல் 22, 1959) அலங்காநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி, ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, மதுரை தத்தனேரியில் உள்ள வைத்தியநாதய்யர் நினைவு நடுநிலைப்பள்ளி, காந்திகிராமத்தில் உள்ள தம்பித்தோட்டம் உயர்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பள்ளிக் கல்வியும், மதுரை வக்ஃப் போர்டு கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரமும் படித்து முடித்தார்.தினமலர், தினமணி, முரசொலி, தீக்கதிர், மாலைமுரசு, ஜனசக்தி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். வாழ்க்கை வரலாறு, அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள் என்று 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.