x

Ba.Venkatesan

பா.வெங்கடேசன், பா.வெ என அறியப்படும் இவர் ஒரு தமிழ் எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமாவார். இவரது பாகீரதியின் மதியம், தாண்டவராயன் கதை போன்றவை விமர்சனரீதியாக பாராட்டப் பெற்ற சிறந்த படைப்புகளாகும். தற்போது இவர் ஒசூரில் வசித்து வருகிறார். குழந்தைப் பருவத்தில் தனது பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டிய இவர் அக்கதைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். பத்து வயதில் தொடங்கிய கதை கேட்கும் பழக்கம் இவரது தந்தையின் உதவியினால் வாசிக்கும் பழக்கமாகியது. தந்தையின் அலுவலக நூலகத்திலிருந்து வழங்கிய அம்புலிமாமா என்னும் பத்திரிக்கை இவரது வாசிப்பு பழக்கம் அதிகரிக்க உதவியது. மறுபுறம் இவர் தனது பாட்டியிடம் கதை கேட்கவும் தவறவில்லை. பதினான்கு வயதில் பக்கத்து வீட்டு நண்பர்களில் ஒருவர் மதுரை பொது நூலகத்தை இவருக்கு அறிமுகப்படுத்தினார். நூலகர் வருவதற்கு முன்பே, நூலகத்தை அடைந்து அதன் நுழைவாயிலில் காத்திருப்பதும், நூலகம் மூடும் வரை நூலகத்திலேயே இருப்பதும் விடுமுறை நாட்களில் இவரது பொதுவான பழக்கமாக இருந்தது. இவர் தனது எழுத்து பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, முத்து காமிக்ஸ் (லயன் காமிக்ஸ் ) வெளியிட்ட, வேதாள மாயாவின் காமிக் கீற்றுகளின் தமிழ் மொழிபெயர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு சில நகைச்சுவை கதைகளை எழுதினார். பின்னர் இவர் தமிழ்வாணனின் கதைகளைப் போன்றே சில கதைகள் எழுதினார். கல்லூரியில் பயிலும்போது, பிரபல தமிழ் எழுத்தாளரான சுஜாதாவை பற்றி அறிந்ததற்கு பிறகே இவரது எழுத்தார்வம் அதிகரித்தது.

Related Products