Chinna Kuthoosi
சின்னக்குத்தூசி என்று பரவலாக அறியப்பட்ட இரா.தியாகராஜன் (ஜூன் 15, 1934 - மே 22, 2011) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இவர் திருவாரூரில் 1934-ல் பிறந்தார். திருவாரூரில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் பெரியார் நடத்திய ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியராக பயிற்சி எடுத்தார்.
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பல்வேறு இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் மே 22, 2011-ல் சென்னையில் காலமானார்.