x

C.Mohan

சி.மோகன் (ஜூன் 12, 1952) இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். நாவல்களும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். 'வயல்', 'புனைகளம்' ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர், வயல் வெளியீடாக நூல்களைக் கொண்டு வந்துள்ளார். 'நடைவழிக் குறிப்புகள்' என்னும் சிறந்த இலக்கிய நினைவுக்குறிப்பு நூலை எழுதியுள்ளார். நூல்களின் மொழிநடையையும் வடிவத்தையும் மேம்படுத்துதல், பழைய நூல்களை பிரதி ஒப்புமை நோக்கி பதிப்பித்தல் ஆகியவற்றில் சி.மோகன் திறன் கொண்டவர். சம்பத்தின் 'இடைவெளி’, சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்’, அசோகமித்திரனின் 'தண்ணீர்’ போன்ற நாவல்களில் பிரதி செம்மையாக்கும் பணியை செய்து கொடுத்திருக்கிறார். ரோங் எழுதிய சீன நாவல் 'ஓநாய் குலச்சின்னம்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்,

Related Products