Ernest Hemingway
எர்னெஸ்ட் ஹெமிங்வே, (ஜூலை 21, 1899 – ஜூலை 2, 1961) ஓர் அமெரிக்க எழுத்தாளராவார். இவரது தனித்துவமான எழுத்து நடை, மிகக்குறைந்த சொற்பிரயோகங்களை உடைய கதைகள் . 20-ஆம் நூற்றாண்டின், புனைகதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல் இவரது சிலிர்ப்பூட்டக்கூடிய சாகச வாழ்வும் பெரிதும் வியப்புடன் நோக்கப்பட்டது. இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920-களின் மத்தியிலிந்து 1950-களின் மத்திவரை எழுதப்பட்டதாகும். ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களின் தனித்துவமான கட்டமைப்பு வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டதே அவரது புனைவுகளின் வெற்றிக்குக் காரணம். அவரது பெரும்பாலான எழுத்துகள் அமெரிக்க இலக்கியப்பரப்பில் செவ்விலக்கிய தகுதி பெற்றவையாகும். ஏழு நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு புனைவற்ற புத்தகங்ளையும் தனது வாழ்நாளில் ஹெமிங்வே எழுதியுள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு மூனறு நாவல்களும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று புனைவற்ற புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டன. கடலும் கிழவனும் (The Old Man and the Sea) நாவலுக்காக இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் 1954-ல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது . இவரது ';கடலும் கிழவனும்' நாவலுக்கு தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளன.