x

G.Nagarajan

ஜி.நாகராஜன் (செப்டம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981) தமிழ் எழுத்தாளர். மதுரையில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.நாவல்கள், சிறுகதைகள் என ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே ஆகிய இவரது நாவல்கள், அவை எழுதப்பட்ட காலத்திலிருந்து பரவலாக வாசிக்கப்பட்டு, பல்வேறு எழுத்தாளர்களால் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Products