x

Gouthama Siddharthan

கௌதம சித்தார்த்தன், நவீன மற்றும் பின் நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, கட்டுரை, கவிதை, சினிமா விமர்சனம், இலக்கிய விமர்சனம் என பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, தீவிரமாக இயங்கி வருபவர். இதற்கு முன்பு ‘உன்னதம்’ என்ற தீவிர இலக்கிய இதழை நடத்தியுள்ள நிலையில், தற்போது ‘தமிழி’ என்ற பெயரில் நாளிதழ் வடிவிலான இலக்கிய இதழைத் தொடங்கியுள்ளார். தமிழ் இலக்கிய சிறுபத்திரிகை வரலாற்றில் நாளிதழ் வடிவில் இலக்கிய இதழ் வெளியாவது இதுவே முதல் முறையாகும். எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன், தனது தமிழி இதழை பழங்குடியினர், விளிம்புநிலை மக்களை வெளியிடச் செய்து வருகிறார். இப்படி விளிம்புநிலை மக்களை இலக்கிய இதழை வெளியிடச் செய்ததும், தமிழ் இலக்கிய உலகில் முற்றிலும் ஒரு புதிய நிகழ்வாகும். மொழிபெயர்ப்பில் அதீத ஈடுபாடு கொண்ட கௌதம சித்தார்த்தன், தனது உன்னதம் அமைப்பு மூலம், 2022, அக்டோபர் இறுதி வாரத்தில், மொழிபெயர்ப்பு உரையாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பாளர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

Related Products