G.Sivaraman
கு.சிவராமன், ஒரு சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர்.
இவர்,நெல்லையில் அமைந்துள்ள தமிழக அரசின் அரசினர் சித்த மருத்துவ கல்லூரி பாளையங்கோட்டையில் தனது சித்த மருத்துவ படிப்பை (B.S.M.S) 1993-ல் முடித்தார். 1990-ஆம் ஆண்டில் தஞ்சை சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைசுவடிகள் வாசிப்பு பயிற்சியில் சான்றிதழ் பயிற்சி பெற்றார். 2004-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இவர் பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் கீழ் வெளிவரும் பூவுலகு என்ற சிற்றிதழின் ஆசிரியராக செயல்படுகிறார். இவர் இயற்றிய கட்டுரைகள் ஆனந்தவிகடன், புதியதலைமுறை, குமுதம் , குங்குமம், ஆண்டுமலர்கள் மற்றும் பிற இணைப்பிதழ்களில் வெளிவந்துள்ளது. 2001 முதல் 2010 வரை ஹெல்த் இந்தியா என்ற தன்னாார்வ அமைப்பின் இணை இயக்குநராக செயல்பட்டார். 2010-ஆம் ஆண்டு முதல் ஆரோக்கியா சித்த மருத்துவமனை சென்னையின் தலைமை மருத்துவராக உள்ள இவர் இதுவரை 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.