Imayam
இமையம் என்ற புனைபெயரில் எழுதும் வெ.அண்ணாமலை (பிறப்பு: மார்ச் 10, 1964) தமிழ் எழுத்தாளர். தனது முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவருடைய முதல் நாவலான "கோவேறு கழுதைகள்", ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி ”கோவேறு கழுதைகள்” நாவலைப் பற்றிக் கூறுகையில், தமிழ் எழுத்துலகில், கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்று புகழ்ந்து கூறியுள்ளார். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது கதைகளில் தமிழ்நாட்டு கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம், தனது படைப்புகளில் பொதுவாக பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் முன் வைக்கிறார். அக்னி அட்சரம் விருது – 1994, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது – 1994, அமுதன் அடிகள் இலக்கிய விருது – 1998, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – 1999, இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் இளநிலை ஆய்வு நல்கை -2002 தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திருவி.க. விருது -2010 பெரியார் விருது - 2013 - திராவிடர் கழகம். இயல் விருது - 2018 - தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள இவர் எழுதிய ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.