Indira Parthasarathy
இந்திரா பார்த்தசாரதி, (பிறப்பு: ஜூலை 10, 1930) தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திரா பார்த்தசாரதி, கும்பகோணத்தில் தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தி. ஜானகிராமனிடம் இவர் பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கர்தாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் நிகழ்கலைத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புக்களை எழுதியுள்ளார். சில நாடகங்களும் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது, தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான் ஆகிய பல விருதுகளைப் பெற்றுள்ளார்.