x

Jeyamohan

ஜெயமோகன், (பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த நாவல்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும், நுட்பங்களும் வெளிப்படுவதாக இவரது வாசகர்கள் கூறுகிறார்கள். ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார் இவர் சிறுவயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978-ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் நாவல்களுக்கு அறிமுகம் ஆனார். பின்னர் 1980-ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் 1982-ல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஜெயமோகன் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார். ’கைதி’ என்ற கவிதை 1987-ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்தி வந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987-ல் கணையாழியில் எழுதிய ‘நதி’ என்ற கதை அசோகமித்திரனின் சிறுகுறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து நிகழ் இதழில் ‘படுகை’, ‘போதி’ முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. 1988-ல் எழுதிய ரப்பர் என்னும் நாவலை 1990-ல் அகிலன் நினைவுப் போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். ஜெயமோகன் தன் தாய்மொழியான மலையாளத்திலும் எழுதுகிறார். மாத்ருபூமி, பாஷாபோஷினி இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. எழுதப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அதிகாரப்பூர்வ ஆசிரியர்களைக் கொண்ட ‘தமிழ் விக்கி’ எனும் இணையக் கலைக்களஞ்சியத்தினை 7 மே 2022-ல் தொடங்கியுள்ளார். கஸ்தூரி மான் (தமிழ்) 2006 நான் கடவுள் (தமிழ்) 2008, அங்காடித் தெரு (தமிழ்) 2010, நீர்ப்பறவை (தமிழ்) 2012, ஒழிமுறி (மலையாளம்) 2012, கடல் (தமிழ்) 2013, 6 மெழுகுவத்திகள் தமிழ் 2013, காஞ்சி (மலையாளம்) 2013, காவியத் தலைவன் (தமிழ்) 2014, நாக்குபெண்டா நாக்கு டாக்கு (மலையாளம்) 2014, ஒன் பை டூ (மலையாளம்) 2014, பாபநாசம் (தமிழ்) 2015, சர்கார் (தமிழ்) 2018 எந்திரன் 2.0 (தமிழ்), இந்தியன் 2 (தயாரிப்பில்), வெந்து தணிந்தது காடு (தமிழ்) 2022), பொன்னியின் செல்வன் (தமிழ்) 2022 ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதியுள்ளார்.

Related Products