J.Francis Kiruba
ஜெ.பிரான்சிஸ் கிருபா (1974 - 16 செப்டம்பர், 2021) தமிழ் நவீன கவிஞர், எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒரே நாவலான 'கன்னி' எனும் நாவல் 2007-ஆம் ஆண்டில், ஆனந்த விகடனின் சிறந்த நாவல் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008-ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றார். 2021-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்தார்.