x

Joe D Cruz

ஜோ.டி.க்ரூஸ் (பிறப்பு: 17 மே 1963) தமிழ் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவு செய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் பிறந்தவர். திருநெல்வேலி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி புனித சவேரியார் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர், தற்போது சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திரைப்படத்துறையில், 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் என்னும் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவை தவிர, கனடா இலக்கியத் தோட்ட விருது - 2006, சுஜாதா - உயிர்மை விருது - 2011 (கொற்கை), லூர்தம்மாள் சைமன் இலக்கிய விருது - 2013, லயோலா இலக்கிய விருது - 2014. இலக்கிய வீதி அன்னம் விருது - 2014, உஸ்தாத் பிஸ்மில்லாகான் விருது - 2015, திருவள்ளுவர் இலக்கிய விருது - 2015 ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது கொற்கை என்ற நாவலுக்கு 2013-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Related Products