Kanimozhi Karunanidhi
கனிமொழி கருணாநிதி (பிறப்பு: 5 ஜனவரி 1968) கவிஞரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் ஆவார். தற்போது 17-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்பு வரை, அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் முன்னாள் தி.மு.க.தலைவரும், ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மகள் ஆவார். எத்திராஜ் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற கனிமொழி, தொடக்க காலத்தில் 'தி இந்து' நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவராகவும் உள்ளார்.
கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கனிமொழி எழுதிய கவிதைத் தொகுப்புகள்: கருவறை வாசனை, கருக்கும் மருதாணி, சிகரங்களில் உறைகிறது காலம்
கட்டுரைத் தொகுப்பு: பார்வைகள், அகத்திணை