x

Ka.See.Sivakumar

க.சீ.சிவகுமார் (1971 - 2017) தமிழ் எழுத்தாளர். 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்கான 'இலக்கிய சிந்தனை விருது' 2000-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தில் பிறந்தவர். திருப்பூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தியுள்ளார். பத்திரிகையாளராக விகடன், தினமலர் ஆகிய நிறுவனங்களில் சில ஆண்டுகள் பணியாற்றினார். எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகங்கத்தில் "காலம் உடன் வரும்" என்னும் தலைப்பில் இவரது சிறுகதை தரப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு, தனது 46-வது வயதில் ரத்த அழுத்தத்தின் காரணமாக மயக்கமடைந்து நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்த விபத்தில் மரணமடைந்தார்.

Related Products