K.Udhayasankar
க.உதயசங்கர், (பிறப்பு: 1960) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். அவரது சிறாருக்கான கதைத் தொகுப்பு புத்தகம் "மாயக்கண்ணாடி" 2016 -ஆம் ஆண்டுக்கான இரண்டு விருதுகளைப் பெற்றது. கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கிய சிறுவர் நூல்களுக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது மற்றும் “ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்” விகடன் குழுமம் வழங்கிய – சிறந்த சிறார் இலக்கிய விருது. அந்த விகடன் விருதுக்கான குறிப்பில் இப்படி எழுதப்பட்டுள்ளது இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். ரயில்வே துறையில் அதிகாரியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இ வரது பணி அனுபவங்கள், இவர் எழுதிய “குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு”, "துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்" ஆகிய சிறுகதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள உதயசங்கர், இருபதுக்கும் மேற்பட்ட பிறமொழி நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.