Lakshmi Saravanakumar
லட்சுமி சரவணகுமார், தமிழ் எழுத்தாளர், இவர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கல்வி கற்ற இவர் குடும்ப சூழல் காரணமாக, பத்து வயதில் மெஸ்ஸில் துவங்கி மெடிக்கல் ஷாப், ரைஸ் மில்லில் நெல் அவிக்கும் வேலை, பிளாஸ்டிக் கம்பெனி என பதினொன்றாம் வகுப்பு வரையிலும் பள்ளி முடிந்ததும் வேலைக்குப் போகத் துவங்கி விட்டார்.. படிப்பு பாதியில் நின்று முழுநேரமாக வேலைக்குச் செல்லத் துவங்கி, ஒயின்ஷாப், பிளாஸ்டிக் கம்பெனி, டெக்ஸ்டைல்ஸ், கட்டிடவேலை, க்ரஷ்ஷர், சரக்கு லாரி எனப் பல்வேறு இடங்களில் வேலை பார்த்துள்ளார், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என பன்முக படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார். இவர் இதுவரை ஆறு நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். திரைப்பட உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் உள்ளார். ‘'கானகன்' என்ற நாவலுக்கு 2016-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருது வழங்கப்பட்டது. இவர் எழுதிய உப்பு நாய்கள் என்ற புதினத்துக்காக 2012-ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது பெற்றுள்ளார். இந்தியன் 2-ஆம் பாகம் திரைப்படத்திற்கான திரைக்கதைக் குழுவில் பணியாற்றி வருகிறார்.