Leo Tolstoy
டால்ஸ்டாய், ரஷ்ய உயர்குடிக் குடும்பத்தில் 1828-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது 'போரும் அமைதியும்/ (1869) மற்றும் 'அன்னா கரீ னினா (1878) ஆகிய நாவல்கள் இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும். இவை மெய்மையியல் புனைவின் இமயங்களாகக் கருதப்படுகின்றன. இவர் தன் 20 களில் தன் பகுதியளவு சுயசரிதை முப்புதினங்களான குழந்தைப் பருவம், சிறுவயதுப் பருவம், மற்றும் இளமைப் பருவம் (1852–1856), மற்றும் தன் கிரிமியப் போர் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவுகளுக்காக (1855) முதன் முதலில் இலக்கிய ரீதியான பாராட்டைப் பெற்றார். இவரது புனைவுகளில் பல பன்னிரு சிறுகதைகள், இவான் இலியிச்சின் இறப்பு (1886), குடும்ப மகிழ்ச்சி (1859), "நடன நிகழ்ச்சிக்குப் பிறகு" (1911) மற்றும் காஜி முராத் (1912) போன்ற பல குறுநாவல்களும் அடங்கும். 1870-களில் டால்ஸ்டாய் ஒரு ஆழ்ந்த அறநெறி சார்ந்த பிரச்சனைகளை உணர்ந்தார். அதற்குப் பிறகு அவர் அதற்குச் சமமாகக் கருதிய ஆழ்ந்த ஆன்மீக விழிப்பையும் உணர்ந்தார். இது இவரது மெய்மையியல் படைப்பான ஒப்புக் கொள்ளுதல் (1882) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு நாதரின் மலைச் சொற்பொழிவை மையமாகக் கொண்ட நன்னெறிக் கருத்துக்கள் குறித்த இவரது இலக்கிய விரிவுரையானது இவரை ஒரு உள்ளார்வம் மிக்க அரசு வேண்டாக் கொள்கையுடைய கிறித்தவராகவும், அமைதிவாதியாகவும் மாற்றியது. இவரது தெய்வத்தின் இராச்சியம் உனக்குள் உள்ளது (1894) போன்ற படைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வன்முறையற்ற எதிர்ப்பு குறித்த இவரது யோசனைகள் 20-ஆம் நூற்றாண்டின் முக்கியத் தலைவர்களான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. ஹென்றி ஜார்ஜ் என்பவரின் ஜார்ஜியம் என்று அழைக்கப்பட்ட பொருளாதாரத் தத்துவத்தின் ஈடுபாடு கொண்ட பரிந்துரையாளராகவும் இவர் மாறினார். இத்தத்துவங்களைத் தனது படைப்புகளில், முக்கியமாக உயிர்த்தெழல் (1899) நூலில் இவர் ஒருங்கிணைத்து வெளியிட்டார்.