Mubeen Sadhika
முபீன் சாதிகா, தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சென்னையில் வசிக்கும் இவரது சொந்த ஊர் மதுரை. பி.ஹெச்டி. நிறைவு செய்துள்ள முபீன், சிறுபத்திரிகைகள் மூலம் எழுத வந்தவர் ஆவார். தேர்ந்த வாசிப்பும், தேடலும் மிக்க முபீன், உலக இலக்கியங்கள், உலக சினிமாக்கள் பற்றியும் எழுதி வருகிறார். இலக்கியம், வாழ்வில் எதிர்கொண்ட அதிசயமான, அதிர்ச்சிகரமான அனுபவங்களை உள்ளடக்கிய இவரின் நீண்ட நேர்காணல் "உறையும் மாயக்கனவு" என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது . போஸ்ட்மார்டனிச எழுத்தின் முன்னோடியாகக் கருதப்படும் டெலூஸ் கட்டாரியின் 'வாட் ஈஸ் மைனர் லிட்ரேச்சர்' என்ற நூலையும், ரஷ்ய எழுத்தாளர் ஆண்டோனியா நெக்ரியின் 'எம்பயர்' நாவலையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு தனித்துவமான தொல்மொழி, முபீன் சாதிகாவுடையது. வாசிப்பை வருத்தாத நடையும், அழகியல் ததும்பும் வார்த்தைகளும், பூடகமாக பொருள் உணர்த்தும் லாவகமும், எளிதில் சாத்தியப்படாத நுட்பங்களும் நிறைந்த.' அன்பின் ஆறாமொழி' என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் கவிதை வெளியின் கவனத்தை ஈர்த்த முபீன் சாதிகா, வானொலி செய்தி வாசிப்பாளர், ஊடகப் பயிற்சியாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குநர் என பன்முகத் திறமைகள் வாய்ந்தவர் ஆவார்.