Mu.Rajendran
மு.ராஜேந்திரன், (பிறப்பு: மே 6, 1959) தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர். தமிழகச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை பதிப்பித்தார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே வடகரை என்னும் ஊரில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். மதுரை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டம் பயின்றார். ஆட்சிப்பணியில் நுழைந்த பின்னர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் சட்டக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து 1998-ல் முனைவர் பட்டம் பெற்றார். 'சட்ட வல்லுநர் திருவள்ளுவர்' என்ற தலைப்பில் அந்த ஆய்வு 2011-ல் நூலாக்கம் பெற்றது. பல்லவர், சேரர் ,பாண்டியர் , சோழர் காலச் செப்பேடுகளை ஆவணங்களில் இருந்து நூல்வடிவாக தொகுத்து வெளியிட்டார். வந்தவாசிப்போர் என்னும் நூலை எழுத்தாளர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து வெளியிட்டார். மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையைச் சொல்லும் வடகரை என்னும் முதல் நாவலை எழுதினார். பிரெஞ்சு ஆதிக்கக் கால பாண்டிச்சேரியின் பின்னணியில் 'மதாம்' என்னும் நாவலை எழுதினார். தமிழகத்தில் இருந்து முதலில் நாடுகடத்தப்பட்டு காளையார் கோயிலை ஆட்சி செய்த மருது சகோதரர்களின் குடும்பத்தினர் பற்றி 1801 மற்றும் காலாபாணி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'காலாபாணி' நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது,