x

Murasoli Maran

முரசொலி மாறன் (ஆகஸ்ட் 17, 1934 - நவம்பர் 23, 2003) தமிழ் எழுத்தாளரும், தி.மு.கவைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து, அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை ஒன்றிய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். சில திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதியுள்ள இவர், சில திரைப்படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். முரசொலி மாறன் அரசியல், இலக்கியம் தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார். அவை: அபாய விளக்கு, ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? 1957, நாளை நமதே, திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி, வால் நட்சத்திரம், 1956

Related Products