x

Na.Muthukumar

நா.முத்துக்குமார் (12 ஜுலை 1975 – 14 ஆகஸ்ட் 2016), தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்றவர். காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து. பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இயற்பியல் பயின்று இளநிலை அறிவியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கலைமுதுவர் பட்டமும் பெற்றார். இவர் எழுதிய 'தூர்' என்ற கவிதையே முதுகலையில் இவருக்குப் பாடமாக இருந்தது. பின்னர் "தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 1990 முதல் 2000 வரை" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார். தொடக்கத்தில் திரைப்பட இயக்குநராக சென்னை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் இணைய விண்ணப்பத்தார். அது கிடைக்காததால் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். கிரீடம் (2007),வாரணம் ஆயிரம் (2008) என சில படங்களுக்கு வசனம் எழுதினார். 1500 பாடல்களும், பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியுள்ள இவர் 2016-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்தார்.

Related Products