x

Nanjil Nadan

நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, வீரநாராயணமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர். நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னணி படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். பணியின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வசித்தவர்,. தற்பொழுது கோயம்புத்தூரில் வசிக்கிறார். நாஞ்சில் நாடன், நகைச்சுவையும், சமூக விமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காகப் புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ என்ற சிறுகதைத் தொகுதி மூலம் புகழ் பெற்றார். ‘தலைகீழ்விகிதங்கள்’ (1977) இவரது முதல் நாவல் ஆகும். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடையாகும். ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். கனடாவின் இலக்கியத் தோட்டத்தின் 2012-ஆம் ஆண்டுக்கான இயல்விருது டோரண்டோவில் இவருக்கு அளிக்கப்பட்டது. இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு 2010-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Related Products