x

Narumpu Nathan

நாறும்பூநாதன் (பிறப்பு: ஆகஸ்டு 27, 1960) கழுகுமலையில் பிறந்தார். நாறும்பூநாதன் முதுகலை கணிதம் பயின்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 33 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஒய்வு பெற்று, தனக்கு பிடித்த இலக்கியத் துறையில் முழுநேரமாக பணியாற்றி வருகிறார். தற்பொழுது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். தமிழ் ஆசிரியரான தன் தாத்தாவுடன் கழுகுமலையில் வசிக்கும் போது வரலாற்று கதைகளைக் கேட்டு கேட்டு வளர்ந்தார். ”வாசிப்பு ஒரு நீண்ட பயணம். ஒரு பரந்த வாசிப்பு மூலமாக மட்டுமே சமூகத்தை புரிந்து கொள்ள முடியும். வாசிப்பின் மூலமாக மட்டும் தான் ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக மாறும்” என்று நாறும்பூநாதன் கூறுவதற்கு ஏற்றவாறே தனது நான்காவது வகுப்பின் பொழுதே வாசிப்பை தொடங்கி விட்டார். கழுகு மலையில் உள்ள அரசு நூலகத்தை அவரது அப்பா அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது தொடங்கிய வாசிப்பு, விடுமுறை நாட்களில் கூட முழு நேரமும் நூலகத்திலேயே கழிக்கும் அளவிற்கு விரிவடைந்தது. " நாறும்பூ" என்னும் வலைப்பூவை 2011 ல் தொடங்கினார். சிறுகதை இலக்கியத்தில் தொடங்கிய ஆர்வம் ஒரு சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவர செய்திருக்கிறது. தொகுப்பில் வராத சில கதைகளை வலைப்பூவில் எழுத ஆரம்பித்தார். நாறும்பூநாதனின் முதல் புத்தகம் "கனவில் உதிர்ந்த பூ" 2002-ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூல் பாளையங்கோட்டை சதகத்துல்லாஹ் அப்பா தன்னாட்சி கல்லூரியில் (2016) முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

Related Products