N.Sokkan
நா.சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17, 1977) என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என்.சொக்கன்” என்று அறியப்படும் தமிழ் எழுத்தாளர். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர், மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் என பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதி வருகிறார், சிறார்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, சீன மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.