Paulo coelho
பவுலோ கோய்லோ (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1947) உலகப் புகழ்பெற்ற பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே தி ஆல்கெமிஸ்ட் ( தமிழில் ரசவாதி) நாவல் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவன் மினிட்ஸ் (Eleven Minutes) என்ற அவரது நாவலில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர்முகம் கொடுப்பது பற்றி கூறியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். இவரது தி ஆல்கெமிஸ்ட் நாவல் தமிழில் ரசவாதி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை பாவுலோ கோய்லோ எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 170-க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 23 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. 'பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்' அமைப்பின் உறுப்பினரான இவர் 'செவாலியே' விருது பெற்றவர் ஆவார். 2007-ல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டார்.