Pa.Vijay
பா.விஜய், (அக்டோபர் 20, 1974) தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது 'ஒவ்வொரு பூக்களுமே..' (திரைப்படம்: ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார். கவிஞர் பா.விஜய் கோயமுத்தூரில் பிறந்தார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.