Rajendirakumar
இராஜேந்திரகுமார், தமிழ் எழுத்தாளர். சுமார் 500 நெடுங்கதை நாவல்களையும், 300 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 1963-ஆம் ஆண்டில் குமுதத்தில் எழுதியத் தொடங்கியவர். 'ஙே' என்ற எழுத்தை அதிகம் பயன்படுத்தியவர் ஆவார். 'ராஜா ராணி' என்ற இதழின் ஆசிரியர். முன்னணி தமிழ் இதழ்கள் அனைத்திலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் எழுதியவர். மாத நாவல்களின் விற்பனை கொடிகட்டி பறந்த நேரத்தில், ஒரே மாதத்தில் ஆறு நாவல்கள் எழுதிய ஒரே எழுத்தாளர். இவரது கதைகள் சில திரைப்படங்களாகவும் மாறின. அவற்றுள் சில:
கண்ணாமூச்சி, கெளரி, மூடுபனி, வணக்கத்துக்குரிய காதலியே