Ravikumar
ரவிக்குமார் (பிறப்பு 1961) ஒரு புகழ் பெற்ற தமிழ் அறிவுசார் மற்றும் ஒரு சாதி - எதிர்ப்பு ஆர்வலர். நிறப்பிரிகை எனும் குறும்பத்திரிக்கையின் ஆசிரியர் ஆவார். நிறப்பிரிகை, 1990-களில் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்ததது. மேலும் இவர் ஒர் தமிழக அரசியல்வாதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் பிறந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். இவர் 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.