x

Romila Thapar

ரொமிலா தாப்பர் (பிறப்பு: 30 நவம்பர் 1931) இந்திய வரலாற்றாசிரியர் ஆவர். இவரது முதன்மையான ஆய்வுப் பரப்பு பண்டைய இந்திய வரலாறு ஆகும். இவர் பல இந்திய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அதோடு 'இந்திய வரலாறு'எனும் மக்களுக்கான நூலையும் எழுதியுள்ளார். இவர் இப்போது புதுதில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியராக உள்ளார். இவருக்கு இருமுறை பத்மபூசண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தும், அவற்றை இவர் ஏற்க மறுத்துவிட்டார். இவர் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தம் வரலாற்று ஆய்வைச் செய்துள்ளார். சீனாவில் உள்ள புத்தர் காலக் குகைகளைப் பார்த்து ஆய்வு செய்துள்ளார். ஆரியர்களின் முதல் வருகையில் இருந்து முசுலிம்களின் வருகை வரை உள்ள வரலாற்றை ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதியுள்ளார். இந்திய நாடு மதசார்பற்று அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறும் ரொமிலா, இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர் ஆவார். இவர் ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்து எழுதியுள்ளார். அடிப்படை வாதம் பேசுவோரும், நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பி வருகிறார்கள் என்றும், அரசியல் நோக்கில் வரலாறு எழுதப்படுதல் கூடாது என்றும், வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் கூறும் ரொமிலா தாப்பர், இருபதுக்கும் மேற்பட்ட வரலாற்றாய்வு நூல்களை எழுதியுள்ளார்.

Related Products