x

Saadat Hasan Manto

சாதத் ஹசன் மண்ட்டோ 11 மே 1912 – 18 ஜனவரி 1955) என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த உருது மொழி எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகங்கள் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர், பஞ்சாப் மாகாணம் லூதியானா மாவட்டம், சாம்ராலா வட்டாரத்தின் பாப்ரோடி கிராமத்தில் பிறந்தவர். உருது இலக்கியத்தில் முத்திரை பதித்த மண்ட்டோ மெட்ரிக் தேர்வில் உருது மொழிப் பாடத்தில் தேர்ச்சியடையவில்லை. ஆங்கிலத்தில் வெளிவந்த ரஷ்ய, ஃபிரெஞ்சு இலக்கியங்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செகாவ், மாக்சிம் கார்க்கி, விக்டர் ஹியூகோ, ஆஸ்கர் ஓயில்ட் ஆகியோரின் புதினங்களால் கவரப்பட்டார். அவரது தொடக்க கால இலக்கியப் பணியானது மொழிபெயர்ப்பாகவே அமைந்தது.1936-ம் ஆண்டு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.பேச்சு மொழி பஞ்சாபி என்றாலும், இலக்கியத்தை கடைசி வரை உருது மொழியிலேயே படைத்தார். 22 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு‍ நாவல், 3 கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். 1936-ல் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மண்ட்டோ கி. அப்சானே’ வெளியானது.

Related Products