x

S.A.Perumal

எழுத்தாளர்.எஸ்.ஏ.பெருமாள் (பிறப்பு: பிப்ரவரி 13, 1944) ஒருங்கிணைந்த இராாமநாாதபுரம் மாவட்டத்தின் விருதுநகர் சத்திரரெட்டிப்பட்டியில் ஒரு விவசாாயக் குடும்பத்தில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தோழர் ஜீவா அவர்களின் உரையால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து படிப்படியாக தன்னை ஒரு கம்யூனிஸ்டாக உயர்த்திக் கொண்டவர். அந்தப் பகுதியில் எந்த பிரச்சினையாக இருந்தாலும், இயக்கம் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் முன்னிலையில் இருப்பார். தன்னியல்பாக மக்களின் பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். 1967 முதல் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். 1968 இல் சாத்தூர் தாலுகா செயலாளராகவும், 1973 இல் மதுரை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 1977 இல் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு முகவை மாவட்டம் உருவானபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக 11 ஆண்டுகளும், பின்னர் விருதுநகர் மாவட்ட செயலாளராக 7 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார். இந்த மாவட்டங்களில் இவரது காலடி படாத கிராமங்களே இல்லை. இயக்கப் பணிகளுக்காக தென் மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் அலைந்து திரிந்து பணியாற்றியவர். இயக்கத்திற்கு பலநூறு ஊழியர்களை உருவாக்கியவர். அவசர நிலை காலத்தின்போது 19 மாத காலம் தலைமறைவாக இருந்து பணியாற்றினார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். 1994-ல் மதுரை தீக்கதிர் நாளிதழில் பொதுமேலாளராக பொறுப்பேற்று பணியாற்றினார். கே.முத்தையா மறைவுக்கு பிறகு செம்மலர் ஆசிரியராக 12 வருடங்கள் பணியாற்றி தற்போது ஆசிரியர் குழுவின் மூத்த ஆசிரியராக உள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், தொடர்ந்து அமைப்பை வழிநடத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளார். இலக்கியம், நாட்டார் கலைகள், பண்பாட்டு ஆய்வுகள், பொதுவுடைமை சித்தாந்தம் என்ற பரந்த தளத்தில் எழுதியும் இயங்கியும் வரும் தீவிரமான இடதுசாரி சிந்தனையாளர். இலக்கியத் திறனாய்வாளர். அரசியல் தத்துவ வகுப்பாசிரியர். சிறந்த பேச்சாளர். சிறந்த மொழிபெயர்ப்பாளர், பாப்லோ நெரூடா, கலீல், ஜிப்ரான், ரசூல் கம்சதேவ் மற்றும் பல தலைசிறந்த கவிஞர்களின் 100-க்கும் மேற்பட்ட கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஸ்ரீஸ்ரீ, தகழி, ராஜாராவ் ஆகியோரின் சிறுகதைகளில் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ள இவர் 27 நூல்களை எழுதியுள்ளார்.

Related Products