S.Devadas
சா.தேவதாஸ் தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், விமர்சகரும் ஆவார். பபானி பட்டாச்சார்யாவின் "லடாக்கிலிருந்து கவிழும் நிழல்" என்ற நாவலை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக 2014-ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், நடையனேரியைச் சேர்ந்த சா. தேவதாஸ் இராசபாளையத்தில் வசித்து வருகிறார். 1975 - 77 காலகட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்ற இவர், கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதுவரை இருபத்தைந்து நூல்களுக்கு மேல் மொழிபெயர்த்திருப்பதோடு, ஆறு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.