Shylaja Vamsi
கே.வி.ஷைலஜா, தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளரும் ஆவார்.திருவண்ணாமலையில் பிறந்த இவர், கேரளாவில் உள்ள பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பிறப்பதற்கு முன்பே இவரது குடும்பம் தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் பணியாற்றிய ஷைலஜா அவர்கள் சிறந்த புத்தக பதிப்பாளரும் கூட. தனது வம்சி பதிப்பகத்தின் வாயிலாக நானூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை பதிப்பித்திருக்கிறார். இதற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதினை ஐந்து முறை பெற்றிருக்கிறார். "பூவுலகின் நண்பர்கள்" என்ற அமைப்பினருடன் சேர்ந்து எட்டு புத்தகங்களையும் பதிப்பித்திருக்கிறார். வணிகவியல் (எம்.காம்.) பட்டதாரியான இவர், எழுத வருவதற்கு முன்பு தேசிய அளவில் புகழ்பெற்ற பள்ளியில் ஆசிரியராகவும், பின்பு கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.