x

Sivasankari

சிவசங்கரி (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993-லிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்தி ட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கை வரலாறுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎வழங்கப்படும் 2010-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய 'பாரத தரிசனம்' எனும் நூலுக்கு கிடைத்தது.

Related Products