Subrabarathimanian
சுப்ரபாரதிமணியன் (பிறப்பு: 25 அக்டோபர் 1955, திருப்பூர்) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். அனைவராலும் அறியப்பட்டவர். இவரது முதல் சிறுகதை ‘சுதந்திர வீதிகள்’ 1978-ஆம் ஆண்டு, விழிப்பு என்னும் இலக்கிய இதழில் வெளிவந்தது. இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழ்நாடு அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் ‘கனவு’ என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடத்திவருபவர். திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுபவர். தொலைபேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கதா விருது (1994 - சிறந்த சிறுகதையாளருக்கானது, இந்திய ஜனாதிபதி வழங்கியது) தமிழக அரசு சிறந்தநாவல் பரிசு (சாயத்திரை நாவலுக்காக), கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது (2011 - சுப்ரபாரதிமணியன் கதைகள் நூலுக்காக, திருப்பூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் சிறந்த நூல்கள் பரிசுகள், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, கோவை லில்லி தேவசிகாமணி விருது சிறந்த சிறுகதையாளருக்காக,, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது (சிறந்த சிறுகதையாளருக்காக,, ஏர் இந்தியா – குமுதம் இலக்கியப் போட்டிப் பரிசு (நகரம் குறுநாவலுக்காக), திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் கலைமாமணி விருது, கி.ரா.வின் கரிசில் விருது (கனவு சிற்றிதழுக்காக), கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை பரிசு (பிணங்களின் முகங்கள் நாவலுக்காக -.ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது ‘ஓடும் நதி’ நாவலுக்காக உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தன்னுடைய படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.