surshkumara indrajith
சுரேஷ்குமார இந்திரஜித், (பிறப்பு: அக்டோபர் 5, 1953) தமிழ் எழுத்தாளர். இயற்பெயர் என். ஆர். சுரேஷ்குமார். பிறந்த ஊர் இராமேஸ்வரம். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். பியூசியை மதுரை நாகமலையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் படித்தார். இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பு மஜுரா கல்லூரியில். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம். 1979 முதல் எழுதி வருகிறார். தமிழக அரசில் சிராசுதாராக பணியாற்றி ஓய்வு பெற்றார். சிறுகதை, நாவல்கள் என, இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.