x

Su.samuthiram

சு.சமுத்திரம் (1941 – ஏப்ரல் 1, 2003) ஒரு தமிழ் எழுத்தாளர். தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவர், அகில இந்திய வானொலியிலும், தூர்தர்ஷனினிலும் பணிபுரிந்துள்ளார். சமுத்திரம், 14 நாவல்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில், சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும், அவர்கள் பட்ட துன்பங்களும், அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. இவரது ‘வேரில் பழுத்த பலா’ நாவலுக்கு 1990-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2003-ல் சென்னையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் காலமானார்.

Related Products