S.Vijayalakshm
ச.விசயலட்சுமி, (பிறப்பு: அக்டோபர் 23, 1972) ஒரு தமிழ் எழுத்தாளர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தவர். சிந்தாதிரிப்பேட்டை, ஆவடி மற்றும் மந்தைவெளியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார்.
1993-ல் பிரசிடென்சி கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம், 1995-ல் அதே கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், 1996-ல் புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரியில் பிஎட் பட்டமும் பெற்றார். 1998-ல் நெட் தேர்ச்சி பெற்றார். 2002-ல் பிரசிடென்சி கல்லூரியில் பி.எச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
எழுத்து மற்றும் வெகுஜன தகவல்தொடர்பு மீதான அவரது ஆர்வத்தினால் கல்லூரி பத்திரிகைக்கு கட்டுரைகளை வழங்கவும், அகில இந்திய வானொலியில் இளையபாரதம், திரைப்படப்பாடல் தொகுப்பு மற்றும் தூர்தர்ஷன் பொதிகை ஆகியவை மூலம் தனது எண்ணங்களை கவிதை மற்றும் சிறுகதை வடிவில் ஒலிபரப்பும் வாய்ப்பும் , நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் திறனும் பெற்றிருந்தார். தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வினில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றார். 2006 ம் வருடம் வரை "பொன்னி" என்ற புனைப்பெயரிலும், அதன் பின் இயற்பெயரிலும் படைப்புகளை வெளியிடத் துவங்கி.. கவிக்கோ", தினமலர், ஆனந்தவிகடன், கல்கி போன்ற தமிழ் இதழ்களில் அவரது கவிதைகள் கட்டுரைகளும், உயிரெழுத்து, உயிர்மெய், கனவு, புதுவிசை, செம்மலர், மணல்வீடு, கல்வெட்டு பேசுகிறது, ஹெல்த், இனியொரு, இளைஞர் முழக்கம், உயிரோசை, அந்திமழை, வெப் உலகம் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க இதழ்களில் இவரது பல கவிதைகளும் வெளியிடப்பட்டுள்ளன.இதுவரை கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.