x

Thamizhvanan

தமிழ்வாணன் (மே 22, 1926 - நவம்பர் 10, 1977) தமிழ் எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். தமிழ்வாணன் தமிழ்நாட்டின் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார்.. பத்திரிகைத் துறையில்: வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் "கிராம ஊழியன்" பத்திரிகையில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை.கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "துணிவே துணை" என்ற சொற்றொடரை குறிக்கோளுரையாக அறிமுகப்படுத்தினார். தனது பள்ளித் தோழரான வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து "ஜில்,ஜில்" பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!". அதனை அடுத்து ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தொடர்ந்து "அல்வாத் துண்டு", "சுட்டுத் தள்ளு", "பயமா இருக்கே" என்ற பல தலைப்புகளில் நூல்கள் எழுதினார். இவருடைய ஒரு பக்க கட்டுரைகள் இன்றும் பிரபலமானவை. கல்கண்டு வார இதழ்: குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை, 'கல்கண்டு' என்ற புதிய வார இதழை ஆரம்பித்து, அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். 'துணிவே துணை' என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை, சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் நடத்தி வருகிறார்கள். படைப்புகள்: நெடுங்கதைகள்: 1.ஆயிரம் கண்கள், 2.இரவு மணி இரண்டு, 3.இருண்ட வீடு, 4.உன் மனம் காயோ? பழமோ?, 5.என்னைத்தேட வேண்டாம், 6.கருகிய கடிதம், 7.கான்ஸ்டபிள் கண்ணம்மா, 8.ஞானக்கிறுக்கு, 9.சிரிப்பொலி கேட்டது, 10.சீன ஒற்றர்கள், 11.பம்பாய்ப் பைத்தியம், 12.பயங்கர நகரம், 13.புயல், 14.பெண்கள் தேடிய புதையல், 15.பெண்ணை நம்பாதே, 16.மர்மத்தீவு, 17.மர்ம மனிதன், 18.மணிமொழி நீ என்னை மறந்துவிடு, 19.மருதமலைச்சாரலிலே, 20.மாயக்கள்ளன், 21.மீனழகி, 22.நாற்பதினாயிரம் ரூபாய், 23.ரகசியம் (இரு பாகங்கள்), 24.ரயில் திருடன். சங்கர்லால் துப்பறியும் கதைகள்: 1.சங்கர்லால் தன் வீட்டில்; 1955 சூன்; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; பக்.80., 2.சங்கர்லால் துப்பறிகிறார், 3.நேபில்சில் சங்கர்லால், 4.ஜெனிவாவில் சங்கர்லால் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள: 1.பிடி 22, 2.கெய்ரோவில் தமிழ்வாணன், 3.ஹவாயில் தமிழ்வாணன் நாடகங்கள்: 1.பகைவென்ற பாண்டியன், 2.பூலித்தேவன் கட்டுரைகள்: 1.கொள்ளைக்காரன் கெட்டிபொம்மு, 2.நூறு வருஷங்கள் வாழ்வது எப்படி?, 3.அழகாய் இருப்பது எப்படி?, 4.இயற்கை வைத்தியம், 5.துன்பமே போ!, 6.பணம் வேண்டுமா?, 7.சிக்கனமாய் இருப்பது எப்படி?, 8.வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி?

Related Products